காதல்

உனக்காக கவிதைகள் சொல்ல நினைத்தேன் , என்
உலகமே நீயானதால் வார்தகைகள்யற்று தவிக்கிறேன்...

கண்மூடி மயங்கி கிடக்கிறேன், நம் காதல்
கனவுகள் தந்த மாய மயக்கத்தினால் ...

பூக்கள் பூக்கும் தருணத்தை புரிய உலகம்போல்
நமக்குள் நாம் புகுந்த தருணத்தை தேடுகிறேன்...

எந்த ஜென்ம பந்தமென தெரியவில்லை ..
ஏழு ஜென்ம பந்தமென புரிந்துகொண்டேன் ஓர் பார்வையில் ...

உன்னை காணும் முன் வேறுவேறயாய் இருந்தோம் ..
உன்னை கண்டமுதல் என்னில் அடிவேராய் ஊன்றிவிட்டாய் ..

உன்னைகாண காத்தித்திருக்கும்
ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிகிறது ...

உன்னை கண்டபின் யுகமும் நொடியாய்
கடந்து விடும் உன் காதல் பார்வையில் ...

உன்னுள் சிறைப்பட தவிக்கிறது இதயம் ,
உன்னுள் கரைந்துவிட தடுக்கிறது என்நாணம் ...

தனிமை மட்டுமே சுகமாய் இருக்கிறது , அதில்
உன் நினைவியக்கம் மட்டுமே ஆள்கிறது ..
.
உன்னில் தொலைந்து , என்னை நான் தேடுகிறேன்
என்னில் நீ கரைந்து , நன்மை நாம் தேடுவது எப்போது ...

இறப்பதற்குள் உன் இருகை இடுக்கில்
சிக்கிகொள்ள தவிக்கிறது இதயம்..

உன்னைப்போல் நானும் , என்னைப்போல் நீயும் ,
நம்மைப்போல உயிருக்கு ஏங்கிறது என் காதல்...

உன் காதல்,
என் காதல்
நமக்கு வரமா, சாபமா, என
புரியாமல் போனாலும் ,
இந்த நொடி மட்டுமல்ல ,
எப்பொழுதும் நீ வேண்டும்
என் காதலாக....

எழுதியவர் : (21-Jul-17, 4:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 227

மேலே