சந்திக்க வேண்டுகிறேன்

ரோசமுள்ள பாசக்காரி-இந்த
ரோமியோவின் நினைவில்லையா..!
உன்னை பார்க்காத நாளெல்லாம்
பரிதவிக்குதே என் நெஞ்சம்...

வேலை பளுவில்
வெகுநேரம் அழைவதால்
வேதனை எனக்கு அதிகம் தானடி
பார்க்க நேரமிருந்தும்
பேச ஆசையிருந்தும்
வரட்டு கர்வத்தால் வராமல் போகிறாயே
வர்த்தங்கள் என்னை கொல்லாதா..?

வெளிச்சம் வராமல்
இருட்டிற்க்கு ஒளியேது..?
உன்னை பாராமல்-என்
விழிகளுக்கு வெளிச்சமேது..?

நீ சூரியன் நான் தாமரை
நான் அல்லி நீ நிலா
உன் வருகை இல்லாமல்
என் மலர்ச்சி ஏது..?

வெயிலில் பனி உருகும்
குளிரில் பனி உறையும்
என் வெயிலும் நீதானடி
என் குளிரும் நீதானடி
அருகே வந்து உறைய வைக்கிறாய்
தூரம் நின்று உருக வைக்கிறாய்

கடிகார முட்கள் சந்திப்பதை பார்க்கவில்லையா..?
முட்கள் சந்திக்காமல் கடிகாரம் இயங்காது
நம் சந்திக்காத நாட்களால் இதயமும் ஏங்குது..!

நிஜத்தில் காதலித்ததை விட
கனவில் அதிகமாக காதலிக்கிறேன்
என் கனவுகளுக்கு உயிர்கொடுக்க
கண் முன்னை வந்துவிடுடி

என் கனவுக்கு உயிர்கொடுக்க
கண் முன்னை வந்துவிடுடி

எழுதியவர் : ந.இராஜ்குமார் (22-Jul-17, 2:52 am)
பார்வை : 459

மேலே