கண்ணீரில் நீ

இமைகள் விழிநீருக்கு
அணை போடுகின்றன...
இருந்தும் கண்ணீரின்
கனம் தாங்காமலே
அவை எக்கணம்
உடைப்பெடுக்குமோ...
விழிகள் சுடுகின்றன
கொதிநிலையில் கண்ணீர்...
இந்நொடி நானழுதால்
கன்னத்தில் இறங்கும்
சூடான நீரிலெங்கும்
உன் நினைவுகளே
வியாபித்திருக்கும்..!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 9:47 am)
சேர்த்தது : Shahmiya Hussain
Tanglish : kanneeril nee
பார்வை : 40

மேலே