கண்ணீரில் நீ
இமைகள் விழிநீருக்கு
அணை போடுகின்றன...
இருந்தும் கண்ணீரின்
கனம் தாங்காமலே
அவை எக்கணம்
உடைப்பெடுக்குமோ...
விழிகள் சுடுகின்றன
கொதிநிலையில் கண்ணீர்...
இந்நொடி நானழுதால்
கன்னத்தில் இறங்கும்
சூடான நீரிலெங்கும்
உன் நினைவுகளே
வியாபித்திருக்கும்..!