நிலவுப் பெண்
இராக்கலாம் உலாப்போகும்
நிலவுப் பெண்ணே...
நின் குழல் மண்ணில்
தண்ணொளி பரப்ப
என் நினைவெல்லாம்
உன் வழி நடக்கும்...
இருள் மறைத்த வெள்ளி நிழலே...
தருக்கள் தரிசித்திடும்
தரை மலர்ந்த மலரே...
நின் நாணச் சிவப்பு கரைந்து
வானில் கலக்குதோ
வைகறை சிவக்குதே தேனே!..