அணைத்து அன்பு செய்ய உரிமை வேண்டும்

அடக்கி ஆளவல்ல
அணைத்து அன்பு செய்ய
உன் அருகிருக்கும் - அந்த
உரிமை வேண்டும்..!

நீ சோர்ந்து நிற்கையில்
தோள்சாய்த்து அரவணைக்க
உன்னவளென்ற - அந்த
அதீத வரம் வேண்டும்..!

என் மனக்களைப்பகற்றும்
மனங்கவர்ந்தவன் - உடற்
களைப்பகற்ற உடனிருக்கும்
உன்னதக் கொடுப்பினை
உடனளிப்பாயா இறைவா..!

அவன் காரியம் யாவிலும்
கைகொடுத்து - கரைகாணாக்
காதலால் அவனைத் தழுவி
கலக்கவேண்டும் அவனோடு நான்..!

அவன் முகம் பார்த்தே - என்
பருவங்கள் பறிபோக வேண்டும்...
அவன் வாழ என்னை வார்த்தே
மரணத்திலும் உடன்போக வேண்டும்..!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 11:09 am)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 66

மேலே