மலர் கொண்டு வா மனம் தருகிறேன்
காத்திருக்கிறேன் உனக்காய்
காற்றென எனை நீ உரச...
பார்த்திருக்கிறேன் உன் வருகை
பனியென எனை நீ நனைக்க...
கிறுக்கும் வரிக்கெல்லாம்
அர்த்தம் வேண்டும் - என்
வேரூன்றிய காதல்- பற்றி
படர உன் மார் வேண்டும்...
நிலை கொள்ளாது தவிக்கும்
என் உணர்வுகள் - இனி
இளைப்பாற - உயிரே
உன் நிழல் வேண்டும்...
நினைவுகளை ஆளும் மன்னா
நிஜங்களின் மாளிகைக்கு - உன்
கால்தடம் காணும்
காதல் வரம் வேண்டும்...
நேசிக்கும் இதயத்துக்கு
நேரகாலம் பார்த்திடாதே...
காலங்கள் மறந்ததான - உன்
காதலில் நான் கரைய வேண்டும்...
ஊடலுக்கெல்லாம் இங்கே
போர் என்று பேர் கொடுத்து
அன்பெனும் களத்தில்
எனை ஊனமாக்கிவிடாதே..
மலர் கொண்டு என் வாழ்வில்
விரைவில் வந்து சேர்...
மனம் தருகிறேன் உயிலாய்
நான் மரித்ததன் பின்னாலும்!..