நீயே என் மாட்சி
கண் மறைவில் நீயிருக்க
கோபதாபங்கள் எந்தன்
கொடிகட்டிப் பறந்திருக்கும்...
கண்ணெட்டும் தூரத்தில்
உன் காதல் முகம் பார்த்துவிடின்
பரிதி முத்தமிடும் பனித்துளியாய்
மறைந்துவிடும் பகை யாவும்...
என் மனதுக்கினியவன் நீ...
உன்னில் மயங்கி மடிகொள்வதிலும்
மாட்சிகள் வேறென்ன எனக்கு?!...