ஊமை நெஞ்சின் ஓசைகள்

நீ
மௌனமாயிருந்தாலென்ன
உன்
இதயத்தின் ஒலிபரப்பு
கேட்டுக்கொண்டுதானிருக்கிறது !
நீ
இருளிலிருந்தாலென்ன
உன்
அன்பின் வெளிச்சம்
பரவிக்கொண்டுதானிருக்கிறது !

பேசாததால் நெருக்கம்
குறைந்துவிடவில்லை
தூரங்களால் நாம்
தொலைந்துவிடவில்லை

உன்னையும் என்னையும்
இணைக்கிறது
அன்பின் இழை
நம் சிரபுஞ்சி இதயங்களில்
என்றும் மழை !

#மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (22-Jul-17, 7:52 pm)
பார்வை : 133

மேலே