நீ மறுமுறை வரும்வரை

கிடைக்கும் நேரம் அதில் அன்று முழுவதும்
நான் சேர்த்து வைத்த நினைவுகள்
கொட்டி தீர்க்கிறேன் கொஞ்சமும்
மிச்சம் வைத்துவிடாமல் ..........

நினைத்த நேரம் பேசிவிடலாம்
என்று நினைக்கையில் கைபேசி கதறி முடித்தும்
எடுத்துவிடவில்லை
அவன் கையில் என் அழைப்பு இல்லை

நீ தினம் பேசும் அழைப்பில்
ஒரு நாள் ஒரு நிமிடம்
தாமதம் என்றாலும்
ஓராயிரம் நினைத்துவிடுகிறேன்

செய்தி வாசிப்பில் உன் பெயர்
சேர்ந்து விடக்கூடாது என்று
தினம் வேண்டுதல்
கண்ணீரோடு .................

சுவையாய் செய்த உணவில்
ஒரு கைப்பிடி உனக்கென ஒதுக்குகிறேன்
பகிர்ந்து கொள்ள வரமாட்டாய்
என்று நன்றாய் அறிந்தும் ..........

நாட்டிற்காக என்று நினைப்பதா
தேசப்பற்று என்று மெச்சுவதா
அருகில் நீ இல்லை என்று அழுவதா
நான் எது செய்ய?

எழுதியவர் : (22-Jul-17, 8:45 pm)
பார்வை : 141

மேலே