காது பட சொல்வாயா

தலைக்கனம் கொண்ட தலைநகரில்
தலைமகளாக பிறந்தவளே-உன்
கடைக்கண் பார்வை பட்டதாலே
காதலில் மூழ்கி தவிக்கின்றேன்..!

ஆயிரம் உறவு எதிர்த்தாலும்
அம்மா அப்பா தடுத்தாலும்
உன்னை பார்க்கா நிமிடங்களில்
உள்மனசு கொதிக்கிறது..!

நூறு ரவுடி சுற்றும் ஊரில்
கூறு போட எதிரி இருந்தும்
உயிரே வெறுத்து வருகின்றேன்
உன்னை பார்த்தால் போதுமென்று..!

சொல்லும் அளவுக்கு அறிவிருந்தும்
வெல்லும் அளவுக்கு வலிமையிருந்தும்
உன்னை பார்த்த மறுநொடியில்
ஒன்னும் தெரியா பேதையாகிறேன்..!

என் இதயத்திற்க்கு புரியும்
உன் இமை பேசும் வார்த்தைகள்
கண்ணால் சொல்லிய காதலை
கொஞ்சம்
காதுபட சொல்வாயா..!

கண்ணால் சொல்லிய காதலை
கொஞ்சம் காதுபட சொல்வாயா..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (23-Jul-17, 1:33 am)
பார்வை : 254

மேலே