தேன்நிலவுக்கு ஊட்டியா கொடைக்கானலா

காந்தள் மெல் விரலில் கணையாழி நான் சூட்ட
விவிலிய வரிகளை பாதிரி ஓத
புன்னகை வரியை அவள் செவ்விதழில் எழுத
வெண்ணிற ஆடை என் தேவதையை மணம் முடிப்பேன் !

NEWLY WEDS என்று எழுதிய காரினில் எல்லோரிடமும் விடை பெற
தேன்நிலவுக்கு ஊட்டியா கொடைக்கானலா என்று நான் கேட்க
உன் மடிதான் என்று அவள் சொல்ல
அள்ளி என் தேவதையை மார்பில் அணைப்பேன் !

பின் ?

பின் என்ன பின் அவ்வளவுதான் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jul-17, 8:28 am)
பார்வை : 72

மேலே