அம்மாவின் கை

மனம் உலகை வெறுத்தாலும்
ஆறுதல் தந்து அன்பு வீசும் கையாக
வாழ்நாள் முழுதும் வருபவள் அம்மாவே

தேய்பிறையாக மறைந்து போகாமல் இருக்க
வளர்த்து விட துணை தரும் கையாக வருபவளும் அவளே

மலர்களை அழகாக்கும் வேர்கள்
மண்ணில் புதையுண்டு இருப்பது போல
என்னை மலர் போல வாழ வைத்து
என் இனிமையில் தன் உணர்வை புதைத்து
கையை கொடுப்பதும் அம்மாவே

எம்மை புரிந்து நாம் காணும் கனவுகளை வென்று விட
இறைவனுடன் வரம் கேட்டு பிராத்தனை செய்யும்
அவள் கையை போல வையகத்தில் உண்டோ

துன்பத்தில் விழுந்து விடாமல்
காந்தம் போல பாசம் கொண்டு
எம்மை இறுக்கி பிடிக்கும்
கையாக வாழ்நாள் முழுதும் இருப்பவள் அம்மா

எழுதியவர் : கலையடி அகிலன் (23-Jul-17, 9:58 am)
Tanglish : ammaavin kai
பார்வை : 223

மேலே