பாதுகாப்போம் கதிராமங்கலம்

கண்ணோடு கலங்காதே
விண்ணோட பிள்ளை நீ
என்னோடு கைகோர்ரடா
தமிழா

கதிராமங்கலம் கொதிக்கின்றது
என் நெஞ்சு வெடிக்கின்றது
வெட்கங்கெட்ட வெட்கங்கெட்ட
பூமி தானடா
தமிழா

வேடிக்கை பார்க்க
நாம் என்ன கோழ
வேட்டியை மடிச்சு காட்டும் நேரம்டா
தமிழா

முன்வச்ச கால
பின் வைக்க மாட்டோம்
முன்னேற நீ
வந்து நில்லடா
தமிழா

பதவிக்காக தாய்நாட்டை வைக்கும்
பதவி வெறிபிடித்த நிறைந்த ஊரடா

கட்சி வெறி ஜாதி வெறி
என்னதான் உங்கள் கொள்கை நெறி
சுடுகாடா சுண்ணாம்பா
ஆனாலும்
தீராதா உங்கள் வெறி

வேசம் மிட்டு வேசம் மிட்டு
வேடிக்கை பார்த்து
ஓட்டுக்காக மட்டும் தான்
நம் காலில் விழுகுது

வெள்ள வேட்டி வெள்ள சட்ட
போட்டுக்கிட்டு தானே
நம் கண்ணில் கட்டிபுட்டான்
கருப்பு துணி தானே

ஊட்டுக் உள்ளேயே
உன்னை கட்டி போட்டான்டா
கட்சி கொடியால்
உன்னை தைச்சிபுட்டாண்டா

போலீஸ் எல்லாம்
கைக்குள்ள போட்டு
போடாமல் போட்டான்
தலையில வெட்டு

போராடியவன் எல்லாம்
சிறையிலே பூட்டு
போர்க்கொடி ஏந்தியவன்
குண்டர் என்னும் கூத்து

இலவசம் என்னும்
இணைய தளம் வந்து
இளைஜர்களை எல்லாம்
அடிமை யாக்குதுஎன்று
யார் சொல்வாரோ
எவர் சொல்வாரோ
எவ்வாறு இவர்கள் புரிந்து கொள்வாரோ

பணம் இருப்பவன் எல்லாம்
வேடிக்கை பார்த்தால்
பிட்சா பர்கர்தான்
உன் பிள்ளைக்கு ஆத்தா

அதனால் சொல்லு
நீ வந்து நில்லு
தமிழ் நாட்டை காக்க
தமிழ் மண்ணை காக்க
போராட வாடா
தமிழா
நீ என் தோழா ..!!!

எழுதியவர் : (23-Jul-17, 1:22 pm)
பார்வை : 75

மேலே