பிரிந்து விடாதே
உன் நினைவுகள் நீளமாகையில் உயிர் எனைவிட்டு பிரிந்து
காதல் மலராகி உன் காலடியில் என்றும் உதிரா மலராக ....
புரியாத புதிராக நீ மட்டும் நிஜமாக என்னை புரியாதவனாய்!
உன் மௌனப் பார்வைக்கத்திகள் என் இதயத்தை ரணமாக்குகின்றது
உன் குரல் கேட்ட திசையெல்லாம் - சென்ற உயிர் வந்த ஆனந்தம் - ஏன்? ...
பாசமெனும் பாம்பு கொத்தி பல தடவை மரணித்த எனக்கு
உன் அன்பென்னும் மருந்திட்டு ஆற்றிட்ட புண்ணை
உன் காதலெனும் கருங்கல் காயமாக்கி விட்டதுவே
நிஜமாகச் சொல்கின்றேன் நீ மட்டும் என்னை மறந்து விடாதே
நீ மட்டுமின்றி நான் என்ன?
உனக்காக மட்டும் எந்தன் வாழ்க்கை
நீ எனக்குள் வாழும் வரை
நான் உனக்குள் வாழ்ந்து கொண்டே இருப்பேன் உனக்குத்தெரியாமலே
ஆனாலும் நீ மட்டும் என்னைப் பிரிந்து விடாதே ....,
அஸ்லா அலி