வேதனையின் காளை

வேதனையின் விளிம்பில்,,,
**************
உன் வார்த்தைகள்
என்னை ரணப்படுத்துகின்ற
பொழுதில்தான் உன் மடி மீது
நான் அழுது கொள்ள நினைக்கிறன்,,,,

எனதன்பின் வெளிப்பாட்டை
உணராமலே நீ என்னுள்
காயங்களை திணிக்கின்ற போது
மரணத்தை துரத்துகிறேன் நான்,,,,

உள்ளம் ஊமைதான்
உதடுகள் சொல்லும் உண்மைகளை
ஒரு போதும்,
நிராகரிப்பதில்லை நீ ?????

நான் நீயானேன் உன்னைக்கண்டபின்,
எதுவும் வேண்டாம் ,
உன் காதலைத்தவிர உன்னிடம்,,,,

உன்னாலான எனது கனவுகளை
நீ கண்டதில்லை ஒரு போதும்,
காணப்போவதுமில்லை.
நீ நிரம்பிய என் இதயத்தின் சுமை
நீ விதைத்த வலிகள் மட்டுமே,,,

தேடு,
உன் தேடலின் விளிம்பிலாவது
என்னைப்போல் ஒருவனை கண்டுகொள்
இல்லையெனில்,
அப்போதாவது என்னை நினைப்பாயா????

என்றாவது ஒரு நாள்
என்னை நீ ஏற்க நினைக்கின்ற போது
என்னையே நான் இழந்திருப்பேன்...

இப்படிக்கு,
வேதனையின் காளை.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (23-Jul-17, 4:17 pm)
பார்வை : 403

மேலே