தூரத்தில் கேட்குது

தூரத்தில் கேட்குது !
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்

வட்டமிடும்
வண்டின் ஓசை
மலருக்குக் கேட்கிறது !

கரையில் தவழும்
அலைகளின் ஓசை
கடலுக்குக் கேட்கிறது !

வீழும்
அருவியின் ஓசை
பாறைக்குக் கேட்கிறது !

வீசும்
தென்றலின் ஓசை
தென்னைக்குக் கேட்கிறது !

மீட்டும்
வீணையின் நாதம்
விரலுக்குக் கேட்கிறது !

அழும்
குழந்தையின் குரல்
அன்னைக்குக் கேட்கிறது !

வானில்
மேகங்கள் மோதும்
தூரத்து இடிமுழக்கம்
உனக்கு கேட்குது !

உன் அருகில்
உனக்குள்ளே
இதயத்தில் ஒலிக்கும்
மனிதநேயம் மட்டும்
உனக்கு கேட்கவில்லையா?

தனிமையில் அமர்ந்து
அமைதியுடன் - உன்
இதயத்தில் கேட்டுப்பார்
மனிதநேயம் ஒலிக்கும் !
பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை,சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (24-Jul-17, 9:22 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 63

மேலே