விமர்சனம்

நெருப்பையே
நெருப்புக்குள்
போட்டு தூயதன்மை
சோதித்த ராமன்
அதே நெருப்பை
நீருக்குள் போட்டாலும்
நெருப்பாகவே
சுட்டெரிக்கும்
என்று வண்ணானுக்கு
சொல்லாதது ஏன்...
தர்மபத்தினி தர்மத்தை
மீறாதவள் என்பதை
ராமன் அறிவான்
ஊரார் அனைவரும்
அறியும் பொருட்டே இத்சோதனை
அன்று முதல் இன்று வரை
நாம் நமக்காக வாழ்வதை விட
ஊராரின் விமர்சனத்துக்கு
பயந்தே வாழ்கிறோம்...

எழுதியவர் : செல்வமுத்து.M (24-Jul-17, 9:47 am)
Tanglish : vimarsanam
பார்வை : 211

மேலே