வருவதும் அமர்வதும் ஆள்வதும்

அணிவகுத்து வரிசையாய்
இப்பக்கமும் அப்பக்கமும்
கவிதைகள் நிற்கின்றன !

உன் மென்பஞ்சு பாதங்கள்
மெல்லமாய் அடியெடுத்து
நீ வருவதை வரவேற்க !

என் இதய தேசத்தில்
என் இதய சிம்மாசனத்தில்" இளவரசியாக
வந்து அமர்ந்து கொள் !

வரவேற்க நான் தயாராகி விட்டேன் !

வருவதும்
அமர்வதும்
ஆள்வதும்
உன்
"சமத்து "

எழுதியவர் : முபா (24-Jul-17, 4:35 pm)
பார்வை : 145

மேலே