படைப்பின் பிழைகள்
இறைவன் படைப்பின்
பிழைகளின்
சாட்சிகள் இவர்கள்
தினம் தினம் போராட்டம்
கண்களில் நீரோட்டம்
நிரந்தரமாக
வீடும் இல்லை
வீதியும் இல்லை
வானமே கூரை
நிலவே விளக்கு
தாதிகள் இல்லை
தாழிகள் இல்லை
பிறப்பும் இறப்பும்
திறந்தவெளியில்
சிக்கலில்லா நிகழ்வுகளாக...