இன்றிரவு என்னால் நிம்மதியாய் உறங்க இயலும்

என் உடையவளே என் காதலே
உன் முடிவற்ற கண்களின் பீடிப்பில்
இருந்து என்னை விடுவித்துக்கொண்டேன்
இலையுதிர்காலத்தின் ஏகாந்தத்தை கொண்ட
உன் இருப்பின் சுகத்திலிருந்து விடுபட்டேன்
மழைநாளில் சாளரத்தின் வழி கண்ட அந்த
இன்னொரு உலகத்தில்தான் தற்போது என்
இருப்பு இருக்கக்கூடும்.
விரைவில் இவ்விடம் நிரந்தரம் கொள்ளலாம்
இவ்விடம் தூதுமடலுக்கான சாத்தியங்களற்று
விளங்குகிறது.
காற்றில் அலைய விட்டிருக்கும் இத்தகவல்
உன்னை அடையும் என்ற நம்பிக்கையில்
இன்றிரவு என்னால் நிம்மதியாய் உறங்க இயலும்.

என்னை அடையும் வழி உனக்குத் தெரியும்
வந்து சேர்.

எழுதியவர் : விவேக் ரவிச்சந்திரன் (26-Jul-17, 12:22 pm)
சேர்த்தது : kanavulagavaasi
பார்வை : 835

மேலே