பட்டமளிப்பு விழா

சோதனைகள் பலவென்று
கற்கவந்தோர் பலருள்
சிறப்பான சிலருள் ஒருவராகி
பாலாடை அணிந்து
தந்த இன்பத்தை காட்டிலும்
கருப்பு அங்கி அணிந்து
சான்றோனென பேரின்பம் தந்து
இவர்கள் பிள்ளை என்ற பட்டம் மருவி
இவர் பெற்றோர்கள் என்றானது இன்று

எழுதியவர் : பாலா (26-Jul-17, 2:23 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 1850

மேலே