எனதருமை காதலியே

உனக்கு தெரியாமலே தினம் உன்னை
பார்க்கிறேன் !

உன் முகம் சோகம்
அப்பி காணப்படுகிறது !

பூக்கள் உன் கூந்தலில்
வாசம் செய்யவில்லை !

புன்னகை என்பது
மறந்து போனதாய் இருக்கிறாய் !

பார்வைகள் மட்டும் நான் நிற்கும்
இடம் யாவும்
தேடலில் அங்கும் இங்குமாய்
அலைபாய்கிறது !

அவ்வப்போது கன்னத்தை
கண்ணீர் துளி தொட்டுப்பார்க்கிறது !

எப்பொழுதும் நீ வராத அந்த டீ கடைக்கு
உன் வருகை புதிதுதான் !
அந்த கடைதானே எனக்கு புகலிடம் !
என்பதால் !

என் அலைபேசியோ தொடரமுடியா சூழல் !
உன் அலைபேசியோ நொடிக்கு முறை தொடுதிரை
தொட்டு தொட்டே தொலைந்திடும் போல !

உன் சோக முகத்தை பார்த்து பார்த்தே
வீடெல்லாம் சோகமாய் !

உன் தலையணை கண்ணீரின் ஈரம் காயவே
சில நாட்கள் ஆகும் போல !

தூக்கத்தை தொலைத்து இருந்தாய்
துக்கத்தை மட்டுமே அணைத்து இருந்தாய் !

தனிமையை காதலிக்க தொடங்கி விட்டாய் !
பிரிவின் வலியை உணர தொடங்கி விட்டாய் !

என்னை உயிர்க்கு உயிராய் காதலித்து கொண்டிருக்கிறாய்
என்பதை !
இந்த சில நாட்களில் உனக்கு நீயே உணர்ந்து இருப்பாய் !

எனதருமை "காதலியே "

எழுதியவர் : முபா (26-Jul-17, 4:11 pm)
பார்வை : 295

மேலே