ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு

உனது மௌனம் பெரிதாய்
ஒன்றும் என்னை பாதிக்கவில்லை !

சலனம் ஏதும் இல்லவே இல்லை !
கண்ணீரும் வழிந்தோடவில்லை !
கதறி ஏதும் அழவும் இல்லை !

உன் மௌனத்தின் நாட்கள் இன்னும்
நீடிக்க நீடிக்க !

மயக்க மருந்து எதுமே இல்லாத
ஒரு "இருதய அறுவை " சிகிச்சைக்கு
என்னை தயார்படுத்தி கொண்டிருப்பதாய் !

உணர்வு மட்டும் எனக்குள் !

எழுதியவர் : முபா (26-Jul-17, 4:45 pm)
பார்வை : 177

மேலே