ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு
உனது மௌனம் பெரிதாய்
ஒன்றும் என்னை பாதிக்கவில்லை !
சலனம் ஏதும் இல்லவே இல்லை !
கண்ணீரும் வழிந்தோடவில்லை !
கதறி ஏதும் அழவும் இல்லை !
உன் மௌனத்தின் நாட்கள் இன்னும்
நீடிக்க நீடிக்க !
மயக்க மருந்து எதுமே இல்லாத
ஒரு "இருதய அறுவை " சிகிச்சைக்கு
என்னை தயார்படுத்தி கொண்டிருப்பதாய் !
உணர்வு மட்டும் எனக்குள் !