உயிரே
உள்ளம்
பேச நினைக்கின்ற வேளையில்
உடன் வரும் உதடுகளும்
ஒட்டாமல் ஒதுங்கி செல்கிறதடி!
உயிரே
உயிர் என்று
உன்னை அழைக்கின்றபோது!!
ஆனால்
உடல் அது
ஒதுங்கி வரும் வேளையில்
என்னுள் என்னுடனே
உள்ளமே
ஒன்றி வர நினைக்குதடி!
உயிரே
உயிர் என்று
உன்னை நினைக்கும் போது...!