உன் மௌனத்தில் தொலைகிறேன்

நீ
மௌனக் கூட்டுக்குள்
நுழையும்போதெல்லாம்
நான்
தனிமைக் காட்டுக்குள்
தொலைந்துபோகின்றேன்
நீ
கோபக் கனல்மூட்டி
விலகும்போதெல்லாம்
நான்
பிரிவின் இருளுக்குள்
புதைந்து மறைகின்றேன் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (27-Jul-17, 1:21 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 507

மேலே