தேடிவந்த ஆடியே ஓடிப்போகாதே நில்

இன்குழல் இசையினை பெண்ணவள்மீட்ட வன்குழப்பத்தில் நான்
என்நிழல் எதிர்காட்டும் கண்ணாடியில் மென்நலிந்த பொன்னாடை இன்றுமட்டும் புதிதாய்...

வடமதுரை வாடாமல்லி வழக்காடுமன்ற வாசலில் நிற்க
மடத்துறவி மதுரகவி மாயக்கண்ணனாவது எப்போது..?

வைகைகொண்டாள் வங்கக்கடல் கண்டாளா...?
சைகைமொழியாள் சமரசமடலுக்கு சம்மதம் பெற்றாளா..?

புனல்நீந்திய பொன்மணலும் கனல்வீசி காற்றில் பறக்க
இனம்ஏந்திய பெண்மலரும் அனல்வீசி அதிகாரம் படைத்திடுமா..?

(ஆடிப் பட்டம் தேடி விதை)

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (27-Jul-17, 10:43 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 66

மேலே