பேறு

ஆலயத்தின் உள்ளே அருள்புரியும்
தெய்வத்தைத் தரிசிக்கும் இவ்வுலகில்.....
தெய்வத்தின் உள்ளே ஆலயம் இருக்கும்
அதிசயத்தைக் காணும் பேறுபெற்றேனே.....
அம்மா.....
தெய்வமாக நீங்கள்.....
உங்களுள் கோவிலாகக் கருவறை.....
கருவறைக்குள் பக்தனாக நான்.....

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (28-Jul-17, 10:58 am)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
பார்வை : 147

மேலே