ஹைக்கூ,தங்கா கவிதைகள்

இமயம் ஏறி உச்சி அடைய தேவை
துணிவு துணிச்சல் பொறுமை
இமயம் ஏறும் நத்தையைப்பார் புரியும் ( .....வாழ்வில் பொறுமை)

உடைந்த மண்பாண்டத்தில் தண்ணீர்
தாகமோடு காகம் அங்கு வந்து
இளம் மூங்கில் புல்லால் நீர் உறுஞ்சி
தாகம் தீர்த்துக்கொண்டது ...............(வல்லவனுக்கு புல்லும்
ஆயுதம்)

நாதஸ்வர இசைக்க கேட்டு
பூத்து குலுங்கின மல்லிகைப்பூ,
செவிகொடுத்து, செவி மடுத்து
காற்றில் வந்த இசைக்கு,
ஓரறிவு ஜீவனில் உயிர்ப்பனவு........(பூவுக்கும் காதுகளுண்டு)

எழுதியவர் : வாசவன்,தமிழ்பித்தன்-வாசு (28-Jul-17, 2:40 pm)
பார்வை : 134

மேலே