நீநான்காதல்

1.
அவள் நீ என்றாள்
அவன் நீ என்றான்
நாம் என்ற வார்த்தை
இன்னும்
உருப்பெறவில்லை.
2.
மழை பெய்து வருகிறது
அவள் இன்னும்
வீடு திரும்பவில்லை
வீட்டிலேயே இருக்கிறது
குடை.
3.
இப்பொழுது
பெய்து வருகிறது
தவளைகள்
வேண்டிய மழை.
4.
மழை நின்றது
சலசலப்பு நின்றது
பேச்சு மட்டும்
ஓயவில்லை.
5.
அக்காவும்
மழையும்
ஒன்று என்றான்
தம்பி
இருவருமே
நீர் பொழிபவர்கள்.
ந.க. துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (29-Jul-17, 3:09 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 114

மேலே