தலைப்பில்லா கவிதை

உன் கைப்பை..
வண்டி சாவி..
கைக்குட்டை ..
மதிய உணவுக் கலன்..
என அத்தனையும்
மறக்காமல் எடுத்து செல்கிறாய்...
என்னை மட்டும் இங்கேயே விட்டு விட்டு...

உடலின் ஒரு பாகத்தை மட்டும்
உரித்து வைத்து விட்டு செல்வது
உனக்கு அத்தனை எளிதா அம்மு..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (2-Aug-17, 7:06 pm)
பார்வை : 161

மேலே