மகளே

பிள்ளை ஒன்று பிறந்த நொடி..
நெஞ்சில் பேரின்பம் பூத்ததடி..!!
பெரும் ஆசையுடன் பெயரிட்டேன்,
நாளை எனக்கு..
நல்ல பெயர் சேர்ப்பாயென்று.

பருவம் வந்த பாவை உன்னை..
கயவர் கணங்கள் தீண்டாமல்,
கண்டிப்பெண்ணும் வேலி போட்டு;
கண்ணில் வைத்து பார்த்துவந்தேன்!!

நாளை கால் ஊன்றி நீ நிற்க..
உன்னை கல்லூரியில் சேர்த்துவிட்டேன்;
நீயோ..
கல்வியிலே நாட்டம் இன்றி,
காதல் படம் கற்று வந்தாய்..!!

பட்டம் பெற்ற பெண்மணியே..!!
இனி, பெற்றவன் துணை வேண்டாமோ?

முன் கோபம் கொண்ட என்னை,
மூடனாக்கி சென்றுவிட்டாய்..!
நீ உதறிவிட்டு செல்வதற்க்கா; உனக்கு
என் உத்திரத்தால் உயிர்கொடுதேன்??

பாசத்தால் வளர்த்த மரம்
வேர் அறுத்து சென்றுவிட..
என்னால் நினைத்தாலும் முடியவில்லை..
அதன் நினைவுகளை அழித்துவிட!!

எழுதியவர் : நேதாஜி (3-Aug-17, 9:21 pm)
சேர்த்தது : Nethajhi
Tanglish : magale
பார்வை : 113

மேலே