தலைப்பில்லா கவிதைகள் -4

அந்திக்கருக்கலில்
அத்துவான காடு விட்டு
ஓடையேறி வீடு திரும்பும்
ஒத்தயடிப் பாதையோரம்
பூத்திருக்கும்
வெள்ளிப் பூக்கள் விலக்கி
அத்தையவள் பறித்து தந்த
நுணாப் பழங்களை
ஒத்திருக்கிறது உன் கண்கள்.

- ராஜா

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (5-Aug-17, 9:46 am)
பார்வை : 143

மேலே