வா வா அருகில் வா
புற்றினில் ஊரும் எறும்பாக
என் இதயம் எங்கிலும் உன் ஞாபகங்கள்
சுற்றித் திரிந்து கிடையாய்க் கிடந்து
என்னைக் கடியாய்க் கடிக்குதடி
திரும்பும் திசையெல்லாம் நீ வந்து
என் கண்களில் ஊசிநூல் கோர்க்கிறாய்
பசுமை பெய்து பெய்து என்னுடலை
பசுந்தரையாய் அமைத்தவளே
அது இப்போது கட்டாந்தரையாய் ஆனதே
இப்போதாவது ஒத்துக்கொள் நான் வறுமைக் கோட்டுக்குக்
கீழ் வசிப்பதற்கு நீ தான் காரணம் என்பதை
ஆக்கம்
அஷ்ரப் அலி