பசுமைப் பைங்கிளி

கற்றைக் குழல் அசைய
கண்களிலே கயல் பாய
சிற்றிடையில் கொடி படர
சிறுமுல்லை மலர் மணக்க
முற்றிய செங் கனிகள்
மோவாயில் இதழ் விரிக்க
ஒற்றையடிப் பாதையிலே
ஒய்யாரமாய்ச் சென்றாள் அவள்
முற்றும் துறந்த முனிவரும்
மோகனம் கொள்ளும் மோகினி
பற்றைக் காட்டின் இளம்பசுமை
பக்கம் மின்னும் வளர் பைங்கிளி

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (5-Aug-17, 2:35 pm)
பார்வை : 157

மேலே