கனவே கலையாதே

நெஞ்சுக்குள் இருக்கும் பெண்ணும்
..... நித்திரைக் கொண்ட போது
கொஞ்சிடவே கனவில் வந்தாள்
.....குங்குமப் பொட்டு வைத்து
மஞ்சத்தில் இன்பம் தந்தாள்
.....வான்மழை பொழிந்தாற் போல
வஞ்சியுடன் சொர்க்கம் செல்ல
.....வந்திடுவாய் கனவே என்றும்

கலையழகி அவளைக் கண்டால்
..... கவிதையிலே எண்ணம் பொங்கும்
கலையழகி கனவில் வந்தால்
..... காதலிலே நெஞ்சம் மூழ்கும்
நிலையான சுகத்தைத் தந்து
..... நித்தமும் காதல் கொள்ள
கலையாத கனவே வந்து
..... கட்டிலிலே இருக்க வைப்பாய்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (6-Aug-17, 8:54 am)
Tanglish : kanave kalaiyaathe
பார்வை : 150

மேலே