நிலவே முகம் காட்டு
சேலையால் முகத்தை மூடி
..... திரையிட்டுக் கொண்ட பெண்ணே
சாலையோரம் உன்னைக் கண்டு
..... தனிமையின் விரதம் முடித்தேன்
ஆலமர விழுது போல
..... அடிமனதில் ஆசைகள் ஆட
நீலமேகத் திரையை விலக்கி
..... நிலவேநீ முகத்தைக் காட்டு
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்