வழியில்லை

காதலைச் சுமக்கும்
இதயத்தை விட, என்
கவிதைகளைச் சுமக்கும்
காகிதங்களும்,
கனவுகளைக் கடத்தும்
இரவுகளும், அவள் -
நினைவுகள் வருத்தும்
பொழுதுகளும் தான் பாவம்!
இவைகளுக்குத்தான்,
வலியில் துடிக்கக் கூட
வழியில்லை!

எழுதியவர் : (7-Aug-17, 12:30 pm)
பார்வை : 141

மேலே