நிலை இல்லாத வாழ்வில்

நிலை இல்லாத
வாழ்வில்
கவலைகளும்
நிலையற்றது தான்.....அதை
உணர
மறுக்கிற
ஒவ்வொரு நொடியும்
நம்
காதல்
மலர்ந்து
மரணிக்கிறது......!!

கண்ணீரைக்
காணிக்கையாக்கும்
ஒவ்வொரு
மணித்துளியும்.....
மரணத்தின்
வாசல்வரை
பயணித்துத்
திரும்புகிறேன்......!!

கொள்ளை அன்பில்
என்னைக்
கொள்ளை
கொண்டவளே....
இவனின்
இவளின்
தனிமை.....இறைவனின்
கொடுமை.....
என்று
மனம்
வேதனையில்
மன்றாடித்
திட்டுகிறேன்.....!!

என்வாழ்வில்
எழுதாத
துன்பங்கள்.....
எல்லாம்
எழுத்தில்
ஏறுதடி......நான்
எழுதாத
காலங்கள்
என்று ஒருநாள்
வரும்.....அப்போதும்
இது
இங்கே
வாழும்.....!!

கரம் பிடித்த
வேளையில்
வரம்கிடைத்த
மகிழ்ச்சியில்.....
துயரம்
மறந்த
நிமிஷங்கள்
எல்லாம்......
நம்முயிர்
வாங்குதடி......!!

தனிமையை
விரும்பிய
காதல்
காலங்கள்.....
காலமெல்லாம்
நம்மை
இருதுருவமாய்
வைத்துப்
பார்க்குதடி......!!

அன்பே
என்
ஆகாயமே....
என்
ஆயுளின்
சுவாசமே.....
நீதான்.......!!!!!!!!

எழுதியவர் : thampu (10-Aug-17, 1:40 am)
பார்வை : 414

மேலே