செம்மறியாடுகளாய் மனிதக் கூட்டம்

எல்லா மதங்களையும் ஆராய்ந்ததில் நன்னேறிகளைக் கடைப்பிடித்து வாழ்வதில் எம்மதமும் சம்மதமென்ற மறைபொருள் விளங்க,
விளங்கிக் கொள்ளாத முட்டாள்களாய் இம்மனிதர்களின் வாழ்க்கை முறையைக் கண்டாலே கோபம் வருகிறது..

ஒருவன் தானொரு முஸ்லீம் என்கிறான்..
குரான் சொல்லும் எதைவும் அவன் அறிந்தவனாக இல்லை...
மற்றொருவன் தானொரு ஹிந்து என்கிறான்...
கீதை சொல்லும் எதைவும் அவன் அறிந்தவனாக இல்லை...
இன்னொருவன் தானொரு கிறிஸ்துவன் என்கிறான்...
பைப்பிள் சொல்லும் எதையும் அவன் அறிந்தவனாக இல்லை...
வேறொருவன் தானொரு பௌத்தன் என்கிறான்...
புத்தர் சொல்லும் எதையும் அவன் அறிந்தவனாக இல்லை...

பின் எதற்காகத் தன்னை மதத்தின் பெயரால் அறிமுகப்படுத்துகிறான்?
எல்லாம் ஒரு பெருமைக்காக...
கூட்டத்தோடு கூட்டம் சேர்ந்து செம்மறியாட்டைப் போல் திரிகிறார்கள் இந்த வாய்ச்சொல் வீரர்கள்...

நன்னெறிகளைத் திருத்தி தனக்குச் சாதகமான சுயநலமிகு நெறிகளாக மாற்றிக் கொண்டுச் சுற்றித்திரியும் மானிடர்களாலேயே பூலோகமென்பது நரகலோகமாயிற்று...

நலமற்ற சொற்களை உதிர்த்துவிட்டு மதத்தின் பெயரில் தப்பிக்கொள்கிறான்...
நலமற்ற சொற்கள் இறைவனுடையவையே அல்ல...
எல்லாம் இந்தச் சுயநல மனிதர்களால் உருவானதே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Aug-17, 6:25 am)
பார்வை : 428

மேலே