நீ கண்ணில் தீமூட்டும் தேவதை--சூழலுக்கேற்ற பாடல்

(நண்பர் சொன்ன சூழலுக்கேற்ப எழுதிய பாடல் )

வார்த்தையில் தொடங்கி
மௌனத்தில் முடியும் காதல் -உன்
மெல்லிய மனதில்
இன்னும் ஏனடி ஊடல்

நான் எதிரில் வந்தால் ஓடுகிறாய்
கண் மறைவாய் போனால் தேடுகிறாய்
நீ கண்ணில் தீயினை மூட்டும் தேவதை
என்றே காட்டுகிறாய்
(வார்த்தையில் )
கோபம் நெஞ்சில் மூளும்போது
அமில வார்த்தைகள் வீசுகிறாய்
தனிமையில் சென்று நடந்ததை எண்ணி
வருந்தித் துடிக்கின்றாய்
உன்னிடம் வந்தால் பார்க்காததுபோல்
எங்கோ விலகிப் போகின்றாய்
இன்னொரு பெண்ணிடம் பேசும்போது
புழுங்கித் தவிக்கின்றாய்

நீ எனக்குள் இருந்து வாட்டுகிறாய்
வலியைக் கூட்டுகிறாய்
(வார்த்தையில்)

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (11-Aug-17, 4:24 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 527

மேலே