பச்சோந்திகள்
பச்சோந்திகள்
குணத்தினையே மாற்றுகின்ற கொள்கையுடைப் பச்சோந்திகள்
பணமொன்றே குறியாகப் பார்த்திடுவார் உலகினிலே
மணமில்லா வாழ்வுதனை மனிதயினம் வாழ்ந்திடுவார் .
உணவுக்கே பஞ்சமாகி உருவின்றிப் பிணமாவார் .
மாறுகின்ற எண்ணங்கள் மாற்றத்தைத் தந்திடுமா .
தாறுமாறாய் நிறமதையும் தன்னலமாய்க் கொண்டிடுவார் .
வேறுபாடாய் நின்றிடுவார் வேற்றுமையை வளர்த்திடுவார் .
ஏறுகின்றார் மரத்தினிலே எற்றமதோ இல்லையினி !!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்