ஏக்கம்

மழையின் சாரல்
மனதில் அன்பின் தூரலாக விழுகிறது
அவை காதலாக மலர்கிறது
சன்னல் திரைகளில் விழும்
மழைத் துளியும் அவன் உருவம் பதிக்கின்றது
என் மனதைப் பதைக்கின்றது
மின்விளக்கும் மின்னிக் கொண்டிருக்கா
என் எண்ணமே அவனை எண்ணிக் கொண்டிருக்கா
இருளும் என்னைச் சூழ்ந்து கொண்டு செல்ல
அலைபேசியும் அலைந்து கொண்டிருக்கா
தொடுதிரையை என் விரல் தொடும்முன்
அவையும் துவண்டுவிடுகிறது
நிலவின் ஒளியும் நிமிர்த்தம் கொள்கிறது
என் மனதின் ஆசையையும்
அவன் மீது வீசுகிறது
நிழல் போல் என்னுடன் பேசுகிறது
அவன் இதழ் பட்டு இதமாகும் இனிமை
பொழுதுகள்
என் கண் இமை பட்டு அவன் கன்னம்
உதை வாங்கும் தருணங்கள் அமைந்திடத??

எழுதியவர் : சண்முகவேல் (12-Aug-17, 3:41 pm)
Tanglish : aekkam
பார்வை : 148

மேலே