பலி
பணத்தைத் தேடி
வாழ்க்கை தொலைந்தது
பணமில்லாமலும்
வாழ்க்கை தொலைந்தது.
புலம்பல் இங்கே
பொது மொழியானது.
அச்சத்திலே தான்
வாழ்கிறான் எல்லாரும்
தன்னைப் போலவே
பிறனும் ஏமாற்றுவானோ?
காலம் கைகட்டி
வேடிக்கை பார்த்தது
எத்தனை சுலபமாய்
பலியானான் என்று.