இதயத்தில் விழுந்த முதல்மழை நீ

இருமுகம் கொண்ட நறுமுகை நீ -என்
இதயத்தில் விழுந்த முதல்மழை நீ
நிரந்தர அழகின் முகவரி நீ -என்
நிழலெனத் தொடரும் உயிர்த்துளி நீ

கனவுகள் வளர்க்கும் கனிமரம் நீ -என்
கவிதைகள் சிரிக்கும் மலர்வனம் நீ
உறவென இணையும் உயர்வரம் நீ -என்
உணர்வினை மீட்டும் புதுசுரம் நீ !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (13-Aug-17, 12:19 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 358

மேலே