அலைபேசி முத்தத்தில்

அலைபேசி முத்தத்தில்
கதைபேசி
நம் காலங்கள்
தொலைகிறது.....
உணர்வுகள் சிதைந்து
மண்ணுக்குள்
புதைகிறது......!!

பிரிவைத்
தாங்கும்
உள்ளம்தான்
சிலவேளை
உயிரையும்
வாங்குது......
கண்ணுக்குள்
காட்சிகள்
வலம்வரும்
போது....அருவியின்
வீழ்ச்சியாய்
கண்ணீரின்
சாட்சிகள்......!!

இருதுருவமாய்
வாழும்
வாழ்க்கையில்.....
இருவருமே
தகர்ந்து
போனோம்......
தயிரியம்
சொல்லும்
ஒவ்வொருத்தர்
உள்ளமும்.....
என்னை
வாழவைக்கும்
ஜீவன்கள்......!!

தனிமைப்பட்டே
என்
வாழ்நாள்
காலங்கள்......
ஓடியது......அதனால்
தான்
போலும்
அன்பின் அணைப்பில்
அடிமைப்பட்டுப்
போனேன்......!

எழுதியவர் : thampu (15-Aug-17, 12:41 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 309

மேலே