விடை தேடும் வினாக்கள்

இடிவிழுந்தது
நம்
நேசத்தில்.....
இடைவிடாத
இன்னல்களால்
என்னை
விட்டுப்
போகுதடி
உன்னைத் சுமந்த
உன்னுயிர்.....!!

ஒருவார்த்தை
பேசிவிடுவாய்
என்றே
இவன் வாழ்க்கையும்
நினைவில்
மட்டும்
நிகழும்
நிகழ்ச்சியாய்
மாறிப்போனது
மகிழ்ச்சி
பறிபோனதால்.....!!

ஆறாத
காயங்களால்
மாறாத
எந்தன்
மரணப்படுக்கை
மெல்ல மெல்ல
மௌனித்துக்
கொள்கிறது
மௌனமாக
மார்படைத்து.....!!

பெண்ணே
உந்தன்
புரியாத
மௌனங்கள்
தெரியாமல்.....
அடுத்தவர்க்கு
என்
சோகங்கள்
புரியாமல்
புன்சிரிப்பில்
அழுகின்ற
வித்தையை
உன்னால்
நான்
செய்கிறேன்.....!!

கன்னத்தில்
கைவைத்து
கதைகேட்கும்
உன்னழகில்
கம்பனாய்
நானும்
கதை சொன்னேன்.......
இன்று
தொலைத்துவிட்டு
தொலைவில்
நின்று..... தம்பனாய்
கவி சொல்கிறேன்......
யாருமற்ற
சபை
நடுவே......!!

உன்
கண்ணில் பட்டாலும்
சோகம்
படாவிட்டாலும்
சோகம்......ஆனாலும்
கிறுக்கல்கள்
இங்கே
வரும்.....!!

எழுதியவர் : thampu (17-Aug-17, 2:57 am)
பார்வை : 268

மேலே