அரசியல் அல்லது
(இ)லஞ்சம்
ஒழியாதவரை
இவ்வுலகில்
பஞ்சம்
அழியாது.....!!
ஊழலால்
உயிர்வாழும்
உத்தமர்கள்
வாழும்
உலகில்.....
நிஜமான
உத்தமர்கள்
ஒரு செல்லாத
காசே.....!!
சிறை சென்றால்
அன்று
வதை.....இன்றோ
சிறைக்குள்
சென்றால்
சிறப்பான
சலுகைகள்.....
சீர்திருத்த
சிறைகள் கூட
சினம் கொண்ட
சீறும்
கருநாகங்களை
வளர்த்துவிடுகிறது.....!!
உண்ணும்
உணவெல்லாம்
ஏதேதோ
வரிகளை
சேர்த்துக்கொண்டு
உள்ளுக்குள்
இறங்க
மறுக்கிறது......
தேசத்தைக் காப்பாற்றுவதாக
சொல்லிச்
சொல்லி
நம்
சுவாசத்தை
சுருக்கும்
கொள்ளைக்கூட்டம்
வாழும்
உலகமிது.....!!
நூறுநாள்
வேலைத்திட்டமெல்லாம்
நின்றே
போச்சுது......
நூறுநாள்
வீட்டுக்குள்ளே
நிகழ்வுகள்
நடிக நடிகர்களின்
நிஜ
முகங்கள்.....
திரையில்......!!!
நிலுவையில்
வழக்குகள்
என்கிற
நம்பிக்கையில்
சட்டப்படிப்பில்
அலைமோதும்
மாணவர்கள்......!!
அடுத்தவன்
அகவையை
கொண்டாடும்
கூட்டம்.....
அண்ணன்
தம்பி
அம்மா
அகவையை
மறந்தே
போனான்.....!!
விழாக்களில்
வீணாகும்
வீண் பேச்சு
நேரங்கள்.....
அடுத்தவன்
வசதியை
பேசிக்கொண்டே
அன்றாடம்
அவன்
அசதியை
போக்குகிறான்.....!!
உலாவரும்
ஆண்டவன்
அணிந்துள்ள
ஆபரணம்
கூட......
அன்பளிப்புக்
கோரிக்கையாய்
அவளிடம்
இருந்து
அவனுக்கு......
போட்டிக்கு
ஆண்டவனும்
ஆனானே.....!!