ரெக்கை கட்டி பறக்குதடி

ரெக்கைகட்டி பறக்குதடி
படபடக்கும் தாவணிகள்
சக்கை போடு போடுதடி
கண்ணடிக்கும் மின்மினிகள்

அலை கொஞ்சும் விழியினிலே
அழகர்மலை தேர் ஒன்று.அசைந்தாடி ஓடுதடி

வலை தப்பி ஒளிந்தோடும்
மான்விழியாள் மேனியிலே
மேயுதடி மீசைவைச்ச காளையது

கன்னிமலை தோப்பினிலே
கோலவிழி குடிகொண்டு
கோலமயில் நடையினிலே
வலைவிரிக்கும் விழி கொண்டு
வசந்தம் தேடி ஓடுதடி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (17-Aug-17, 11:35 am)
பார்வை : 131

மேலே