பட்டணந்தான்

கழனியில் இன்று பயிரில்லை
கட்டிடம் பயிராய் வளர்ந்ததுவே,
உழவனும் இங்கே தங்கவில்லை
ஊரை விட்டே போய்விட்டான்,
பழகிய மாடும் அவனுடனே
பட்டணம் வந்து சேர்ந்ததம்மா,
வழக்கமாய்த் தின்னும் புல்லில்லை
வாய்க்குக் கிடைத்தது குப்பைகளே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Aug-17, 7:10 pm)
பார்வை : 114

மேலே