நெஞ்சமெனும் கூட்டினிலே

நெஞ்சமெனும் கூட்டினிலே
கூடுகட்டும் மாங்குயிலே
வண்ணமயில் விழியினிலே துள்ளியாட நான் வரவா

மாஞ்சோலை பூங்குயிலே
உன் முத்துநகை சிரிப்பினிலே
முத்துமணி மாலை ஒன்னு கோர்த்து நானும் தந்திடவா

கொஞ்சும் விழி கோலமயில்
கொஞ்சும் உந்தன் விழினிலே
கொஞ்சும் கிளி பறக்குதடி

காற்றிலாடும் கூந்தலிலே
மல்லிகையும் மணக்குதடி
ஊஞ்சலாடும் நெஞ்சினிலே
உன்னழகும் மணக்குதடி

கம்பன் தேடும் கவிமகளே
கம்பன் வெம்பி போனாறடி
உன் கண்ணசைவில் கவிஞனாகி

நீரில் நீந்தும் மீனதுவும்
என்றும் சோர்ந்து போகாதடி
உன் நெஞ்சில் நீந்தும்
என்னுயிரும் என்றும்
சோர்ந்து போகாதடி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (18-Aug-17, 7:52 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 115

மேலே